முகப்பு
இந்தியா

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய இன்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் சிறைத் தண்டனையை

இந்தியா

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய இன்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் சிறைத் தண்டனையை

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:41 PM
பகிர்:

புதுதில்லி: நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய இன்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் சிறைத் தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன், பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அனுப்பினார். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி கர்ணன் ஏற்கவில்லை. மேலும், தன் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாகக் கூறி நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை கைது செய்யும்படி மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா நகர காவல்துறையின் தனிப்படை தமிழகம் வந்தது.

இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலத்துக்கு அவர் சென்றிருக்கலாம் என்ற தகவல் அடிப்படையில் அங்கு சென்று தேடிப்பார்த்த தனிப்படை, மீண்டும் சென்னை திரும்பியது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு இன்றும் தெரிவித்துள்ளது. 4-வது முறையாக ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், சிறைத் தண்டனையை உறுதி செய்தது.

இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்யும் நடவடிக்கையில் கொல்கத்தா நகர காவல்துறையின் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →