இந்தியா

ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து 

DIN

புது தில்லி: ஆந்திர முதல்வராக வியாழனன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில்  151 இடங்களில் வென்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வியாழன் காலை விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வராக வியாழனன்று பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆந்திர முதல்வராக பதவிஏற்றுக் கொண்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அவருக்கும், அவரது அமைச்சர்களுக்கும் மற்றும் ஆந்திர மாநிலம் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT