இந்தியா

சிபிஐக்கு எதிரான முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சிதம்பரம் தரப்பு இன்று திரும்பப் பெற்றது.

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சிதம்பரம் தரப்பு இன்று திரும்பப் பெற்றது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஆனால் அதன் மீது விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வருவதற்கு முன்பே சிதம்பரம் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிபிஐக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில், சிபிஐ காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அதற்கு முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக, இதே வழக்கில் அமலாக்கத் துறைக்கு எதிராக சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT