மும்பை: கால்வாயில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்; மீட்கும் பணி தீவிரம்!
மும்பையில் 5 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததை அடுத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் 5 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததை அடுத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் காட்கோபர் பகுதியில் இன்று பிற்பகல் 12.17 மணிக்கு சிறுவன் கால்வாயில் விழுந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து பல மணி நேரமாக சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பந்த் நகர் காவல் நிலையம், சாவ்ரிபாய் பூலே நகரில் இந்த கால்வாய் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறுவனின் பெயர் ஹுசைன் ஹமீத் ஷேக் என தெரிய வந்துள்ளது.