தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ரூ.20.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் பல்வேறு துறைகள் சார்ந்த 7 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி, 5 கட்டங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி என்றும் கூறினார்.
ஐந்து கட்டங்களாக தொகை ஒதுக்கீடு விவரம்:
முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி
இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி
மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி
நான்காம் & ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி
கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட முந்தைய திட்டங்கள் - ரூ. 1,92,800 கோடி
ஆர்.பி.ஐ சலுகைகள்- ரூ. 8,01,603 கோடி
மொத்தம் - ரூ. 20,97,053 கோடி
தற்சார்பு இந்தியா திட்டத்தின் இன்றைய 7 முக்கிய அறிவிப்புகள்!
8.19 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தற்சார்பு இந்தியா திட்டத்தின் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரூ. 20.97 லட்சம் கோடி: எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி?
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு டிவி சேனல்: நிதியமைச்சர் அறிவிப்பு