முகப்பு
இந்தியா

தில்லியில் மனைவி, பிள்ளைகளைக் கொன்றவர் தற்கொலை

தில்லியின் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
தில்லியில் மனைவி, பிள்ளைகளைக் கொன்றவர் தற்கொலை
பகிர்:


புது தில்லி: தில்லியின் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரோஹிணியின் நஹர்பூர் பகுதியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

தீரஜ் யாதவ் (31)  என்பவர் தில்லி போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக இருந்தார். இவர் வீட்டில் தனது அறையில் இருந்த மின் விசியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடல் கைப்பற்றப்பட்டது.

இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, மனைவி ஆர்த்தி (28), இரண்டு மகன்கள் ஹிதென் (6), அதர்வா (3) ஆகியோரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →