இந்த ஆண்டு இயல்பான அளவில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டு வரும் பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: இந்த ஆண்டு வரும் பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எம். ராஜீவன் இன்று காணொலி காட்சி வாயிலாக நடத்திய கூட்டத்தில் பேசியதாவது, இந்த ஆண்டில் வரும் பருவமழைக் காலத்தில் 98 சதவீதம் இயல்பான மழைப் பொழிவு இருக்கும்.
இந்த ஆண்டு இயல்பான அளவில் மழைப் பொழிவு இருக்கும் என்பது மிகவும் நல்ல செய்தியாக உள்ளது. வழக்கமாக, தென்மேற்குப் பருவமழை என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறுவது வழக்கம்.
Advertisement
இந்த பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவு 96 - 104 சதவீதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.