இந்தியா

சையனட் செலுத்தி மனைவியைக் கொன்றவர் கைது: சிக்க வைத்த பிரேத பரிசோதனை அறிக்கை

DIN

பரூச்: குஜராத் மாநிலம் அங்லேஷ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவிக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில், சையனட்டை செலுத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊர்மிளா வசவ (34) மரணமடைந்து ஒரு மாத காலத்துக்குப் பிறகு, அவரது கணவர்தான் குற்றவாளி என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

முதற்கட்டமாக, ஊர்மிளாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் சையனட் விஷம் ஊசி மூலம் செலுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், ஊர்மிளாவின் கணவர் ஜிக்னேஷ் பட்டீல், அவரது பணியாற்றம் தொழிற்சாலையிலிருந்து சயனைட் விஷத்தை வாங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT