புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 252 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,995 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 88,993 ஆக உள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,38,763 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 4,75,888 ஆகவும் உள்ளது.
மேலும் படிக்க.. நிலவில் மர்ம வீடு!
டிசம்பர் 14ஆம் தேதி காலை வரையில், நாட்டில் இதுவரை 133.8 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.