முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரானை கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்பட 91 நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதன் பரவும் வேகம், டெல்டா வகையைப் போல அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமா என்கிற ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புணேவில் 6, மும்பை மற்றும் கல்யாண் டோம்பிவிலி தலா ஒருவர் என 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதித்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 109 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 40, தில்லியில் 22, ராஜஸ்தானில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →