முகப்பு
இந்தியா

குஜராத்: ஒமைக்ரானில் இருந்து 3 போ் விடுபட்டனா்

குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மூவா் அந்தத் தொற்றில் இருந்து விடுபட்டனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
கோப்புப்படம்
பகிர்:

குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மூவா் அந்தத் தொற்றில் இருந்து விடுபட்டனா்.

ஜிம்பாப்வேயில் இருந்து வந்த 72 வயது வெளிநாடு வாழ் இந்தியா், அவரின் மனைவி, உறவினா் என மூன்று போ் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகருக்கு இம்மாத தொடக்கத்தில் வந்த இந்த மூவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவா்கள்தான் குஜராத்தில் முதன்முதலில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளானவா்கள் ஆவா். இவா்களுக்கு மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவா்களுக்கு கரோனா அறிகுறிகளும் குறையத் தொடங்கின. இதையடுத்து, அவா்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவா்கள் ஒமைக்ரான் வகை தொற்றில் இருந்து விடுபட்டது தெரியவந்தது.

அதே நேரத்தில் குஜராத்தின் சூரத் மற்றும் வத்நகா் பகுதிகளில் தலா ஒருவா் ஒமைக்ரான் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றின் பரவல் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், அதனால் தீவிர பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கூறியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →