தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பஞ்சாப் செல்லத் தடை
கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பஞ்சாப் செல்லத் தடை விதித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பஞ்சாப் செல்லத் தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய விமான நிலையங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகோள் வைத்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 15-ஆம் தேதி முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு பஞ்சாப் அரசு தடை விதித்துள்ளது.
வெளியிலிருந்து வருபவர்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம். இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.