111 நாள்களுக்குப் பின்.. நாட்டில் கரோனா பாதிப்பு 34,000 ஆகப் பதிவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 111 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான பாதிப்பாகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 111 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான பாதிப்பாகும்.
நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,06,19,932 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 51,864 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,52,294. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகப் பதிவாகி வருகிறது. குணமடைவோர் விகிதம் தற்போது 97.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,03,281 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,64,357 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 35.75 கோடி (35,75,53,612) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர்: 3,06,19,932
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர்: 2,97,52,294
கரோனாவுக்கு பலியானோர்; 4,03,281
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்: 4,64,357
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 35,75,53,612