சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை காங். எம்.பி.க்கள் கூட்டம் 
இந்தியா

சோனியா காந்தி தலைமையில் இன்று மாலை காங். எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

ANI

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடக்கும் கூட்டத்தில், தொடர்ந்து 8வது நாளாக பெகாஸஸ் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸின் மக்களவை மற்றும் மாநிலங்களவை  உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT