'பாபா கா தாபா' உரிமையாளரான முதியவர் தற்கொலைக்கு முயற்சி
சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமடைந்த தெற்கு தில்லி பகுதியில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வந்த 81 வயது முதியவர், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புது தில்லி: சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமடைந்த தெற்கு தில்லி பகுதியில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வந்த 81 வயது முதியவர், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெருவோரமாக மிகச் சிறிய உணவகத்தை நடத்தி வந்த பாபா கா தாபா உரிமையாளர் கந்த பிரசாத் பற்றி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியானது. பொது முடக்கத்தால், தனது உணவகத்துக்கு யாரும் வரவில்லை என்று அவர் கவலை வெளியிட்ட விடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல பிரபலங்களும் அந்த உணவகத்துக்குச் சென்று உணவருந்தியதோடு, அவருக்கு பண உதவிகளும் குவிந்தன.
இதையும் படிக்கலாமே.. சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம் எது?
Advertisement
இதற்கிடையே, தன்னைப் பற்றி செய்தி வெளியிட்ட கௌரவ் வாசன் மீதே பண மோசடிப் புகாரையும் அளித்திருந்தார்.
தனக்குக் கிடைத்த நிதியைக் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் அவர் மிகப்பெரிய உணவகம் ஒன்றை தில்லியில் தொடங்கினார். பல ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட உணவகத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் ஒரு லட்சம் செலவிட்டு தொடங்கிய உணவகத்தை விற்றுள்ளார். அதில் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. பிறகு, பழையபடி, தெருவோரத்தில் இருந்த தனது சிறிய கடையை நடத்தி வந்துள்ளார். பணமோசடிப் புகார் அளித்த கௌரவ் வாசனிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதையும் படிக்கலாமே.. போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி
இந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் உணவகம் தொடங்கியதில் நட்டம் ஏற்பட்ட விரக்தியில் இருந்த கந்த பிரசாத், தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பிரசாத் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. மதுபானத்தில் தூக்க மாத்திரைகள் கலந்து குடித்ததாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உணவகம் தொடங்கியதில் ஏற்பட்ட நஷ்டத்தால், கந்த பிரசாத் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.