இந்தியா

இந்திய எல்லையில் சீன கிராமம்? முக்கியமான கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

DIN

சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

மன்னிக்க முடியாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

குறிப்பாக சீன விவகாரத்தில், அரசுக்கு எந்த விதமான வியூகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும் நடுவே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா பெரிய கிராமத்தை எழுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "எங்கள் பகுதியில் சீனா மேற்கொண்ட சட்டவிரோதமான ஆக்கிரமிப்பையும் நியாயமற்ற அவர்களின் கூற்றுகளையும் ஏற்கவில்லை" என குறிப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்துள்ள ராகுல் காந்தி, "நமது தேசிய பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவிடம் சரியான வியூகம் இல்லை. மிஸ்டர் 56 இன்ச் அச்சப்படுகிறார்.

இந்திய அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் அதே சமயத்தில், நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களைப் பற்றி நினைத்து கொண்டிருக்கிறேன்" என்றார். 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முப்படை தளபதி ராவத், "இந்திய எல்லைக்கு வந்து சீனா புதிய கிராமத்தை கட்டமைப்பதாக எழுப்பப்பட்ட சர்ச்சையில் உண்மை இல்லை. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் சீன பகுதிக்கு உள்ளேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்திய எல்லைக்குல் சீனா ஊடுருவவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT