இந்தியா

ராணுவ அதிகாரிகளுடன் இன்று உரையாடுகிறார் ராஜ்நாத் சிங்

DIN

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக்.27) பிற்பகல் 3 மணியளவில் ராணுவ அதிகாரிகளுடன் உரையாட திட்டமிட்டுள்ளார்.

ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

ராணுவ அதிகாரிகள் மாநாடு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் ராணுவ அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று ராணுவ அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் உரையாற்றவுள்ளார்.

இதில், தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், முக்கிய சாலைகளின் ஓரத்தில் மத்திய துணைராணுவப் படையினா் சாவடிகளை மீண்டும் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT