முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனாவால் 4.45 லட்சம் பேர் பலி

இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4.45 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
இந்தியாவில் கரோனாவால் 4.45 லட்சம் பேர் பலி
பகிர்:

இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4.45 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 383 பலியானதைத் தொடர்ந்து  இதுவரை பலி எண்ணிக்கை 4.45 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

நேற்று (செப்-21) நிலவரப்படி புதிதாக 26,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 3.35 கோடியாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,45,784  பதிவாகியிருக்கிறது.

மேலும்  நாட்டில்  82.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும்  அதில் 25.88 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள்  எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →