இந்தியா

பேருந்தை இயக்கும் பெண்கள்! பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்

தில்லி போக்குவரத்துத் துறையில் ஏராளமான பெண்கள் ஓட்டுநர்களாக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN


தில்லி போக்குவரத்துத் துறையில் ஏராளமான பெண்கள் ஓட்டுநர்களாக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஓட்டுநராக பணிபுரிவதற்கான பணி ஆணையை தில்லி அரசு இன்று வழங்கியது. முதல் குழுவாக 11 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

பெண் ஓட்டுநர்களுக்கு பணி ஆணைகளை வழங்கியதுடன் பெண் ஓட்டுநர் இயக்கும் பேருந்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உடன் பயணித்து அவர்களுடன் கலந்துரையாடினார். 

ஓட்டுநருடன் அமைச்சர் கைலாஷ் கெலாட்

தில்லி போக்குவரத்துத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதற்காக விண்ணப்பித்த மகளிருக்கு பேருந்து ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து பணி ஆணைகளையும் வழங்கி வருகிறது. 

அந்தவகையில் முதல் குழுவுக்கு இன்று தில்லி போக்குவரத்துத் துறையில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி, அவர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சரும் உடன் பயணித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பின் காஸா அமைதி வாரியத்தில் இணைந்த பாகிஸ்தான்! இந்தியாவின் முடிவு என்ன?

சதத்தை தவறவிட்ட அபிஷேக் சர்மா..! இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

கையில் சிகரெட்! 120கி.மீ வேகம்! கார் விபத்தில் 4 பேர் பலி!

பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ம.பி.யில் 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்த விவகாரம்! மேயருக்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்!

SCROLL FOR NEXT