இந்தியா

பின்வாங்கியது ரயில்வே: திரும்பப் பெறப்பட்ட பயணிகளின் தரவுகள் விற்பனை

DIN

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் டெண்டரைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்று இந்திய ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது.

இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்திய ரயில்வே டெண்டர் கோரியிருந்தது. வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த டெண்டர் கோரப்பட்டதாக தெரிவித்த ரயில்வேயின்  முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி, வணிக நோக்கங்களுக்காக பயணிகளின் தரவுகள் விற்பனை  செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்படுவது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பயனர் தனிப் பாதுகாப்பு 2018 சட்டத்தின்படி பணமாக்கல் நடவடிக்கைக்காக விடுக்கப்பட்ட டெண்டர் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT