வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் டெண்டரைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்று இந்திய ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது.
இதையும் படிக்க | சீனாவில் இருந்து தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? - அப்பாவு கேள்வி
இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்திய ரயில்வே டெண்டர் கோரியிருந்தது. வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த டெண்டர் கோரப்பட்டதாக தெரிவித்த ரயில்வேயின் முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி, வணிக நோக்கங்களுக்காக பயணிகளின் தரவுகள் விற்பனை செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்படுவது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பயனர் தனிப் பாதுகாப்பு 2018 சட்டத்தின்படி பணமாக்கல் நடவடிக்கைக்காக விடுக்கப்பட்ட டெண்டர் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.