மும்பையில் அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து!
மத்திய மும்பையின் குரே சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய மும்பையின் குரே சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அவிக்னா பார்க் கட்டடத்தில் காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
இந்த தீ விபத்து சம்பவத்தில் இதுவரை யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
கடந்தாண்டு அக்டோபரில் அதே குடியிருப்பு வளாகத்தின் 19 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வயது காவலர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.