பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘சிறிய அளவிலான அறிகுறிகளுடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன்.தற்போது, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். தயவுசெய்து என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.