இந்தியாவில் இதுவரை 160 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் வேகமாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ’ இந்தியாவில் இதுவரை 160 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.