முகப்பு
இந்தியா

மும்பையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

மும்பையில் இன்று முதல் மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளிகள் அனைத்து வகுப்பு மாணவர்களையும் வரவேற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
கோப்புப் படம்
பகிர்:

மும்பையில் இன்று முதல் மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளிகள் அனைத்து வகுப்பு மாணவர்களையும் வரவேற்றன.

நாட்டில் கரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. 

தற்போது, மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்துவருவதையடுத்து, கடந்த மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்குப் பின்னர், இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து ஆன்லைன் முறையிலும் வகுப்புகள் தொடர உள்ளது. இதனிடையே, பெற்றோர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கலாம், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரவை அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →