முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் தொடரும் கனமழை: இதுவரை 89 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 89 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 89 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உயிர்சேதமும், பொருள் சேதமும் அதிகரித்து வருகின்றது.

மகாராஷ்டிரத்தின் மும்பை, தானே, நாசிக், புணே, நாக்பூர் உள்பட 27 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் 249 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியான நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

கனமழையால் 1,368 வீடுகள் சேதமடைந்த நிலையில், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →