முகப்பு
இந்தியா

தில்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2-வது நாளாக கைது

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகம் அருகேவுள்ள விஜய் செளக்கில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விஜய் செளக் பகுதியில் காங்கிரஸ் எம்.பி.க்களை தடுத்து நிறுத்திய தில்லி காவல்துறையினர் அவர்களை கைது செய்து தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட 57 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று மூன்றாவது நாளாக ஆஜராகியுள்ளார்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →