இந்தியா

ம.பி.யில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: 60 பயணிகள் உயிர் தப்பினர்

DIN

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த 60 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

போபாலில் இருந்து ஹைதராபாத் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஷாபூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவநாராயண் முகதி கூறுகையில், 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.69ல் ஓடும் பேருந்தில் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் புகை ஏற்படத் தொடங்கியது, பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு விரைவாகக் கீழே இறங்கினர். இதனால், யாருக்கும் எந்த தீக்காயம் ஏற்படவில்லை. 

பேருந்து மற்றும் பயணிகள் வைத்திருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது, பின்னர் சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT