இந்தியா

வெள்ளம் வந்தாலும் விடுமுறை கிடையாதா? படகில் பள்ளி செல்லும் அசாம் குழந்தைகள்

PTI


தேமாஜி: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேமாஜி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோர் படகில் அழைத்து வந்து விட்டுச் செல்கிறார்கள்.

விஷ்ணுபூர் பகுதியில் இயங்கி வரும் துவக்கப் பள்ளி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கூறுகையில், எங்கள் துவக்கப் பள்ளியில் சுமார் 29 மாணவர்கள் இருக்கிறார்கள். வெள்ளம் காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள். சில பெற்றோர் படகு மூலம் பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்கிறார்.

அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக 29 மாவட்டங்களை சூழ்ந்துள்ள வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 1400 கிராமங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளன. நகோன் மாவட்டம் மிகவும் மோசமாக மாவட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT