இந்தியா

ஈரான் சிறையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

DIN

ஈரானின் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சனிக்கிழமை இரவு தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள செல்களுக்கும் பரவத் தொடங்கியது. 

பல மணி நேரங்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும், கைதிகள் யாரும் தப்பிக்கவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தன.

இந்த தீ விபத்தில் கைதிகள் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். 

எவின் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைக் குழு  கைதிகளை மீண்டும் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுவதாக சிறைத்துறை புகார் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT