இந்தியா

வேற்று சாதி இளைஞருடன் காதல், தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!

DIN

உத்தரப் பிரதேசம் ஷேக்பூரா கதீம் கிராமத்தில் 17 வயதான தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணனைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

கடந்த ஞாயிறு அன்று வீட்டில், தங்கை முஸ்கானை  குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துமாறு அண்ணன் ஆதித்யா கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்காததால் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

முஸ்கானை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்ணன் ஆதித்யா நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பதாக உதவி காவல் கண்காணிப்பாளர் அபிமன்யூ மங்ளிக் தெரிவித்துள்ளார்.

தங்கை முஸ்கான் வேற்று சாதியின இளைஞரைக் காதலித்து வந்ததாகவும் அண்ணன் ஆதித்யா அதை எதிர்த்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பிச்சென்ற குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் உள்ளனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT