இந்தியா

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம் பறிமுதல்

புவனேஸ்வரில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புவனேஸ்வரில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 3-ம் தேதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி பிரமோத் குமார் ஜெனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவனேஸ்வரில் உள்ள ரயில்வே முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிரமோத் குமார் ஜெனாவிடம் இருந்து வங்கி மற்றும் அஞ்சலக கணக்கில் இருந்த சுமார் ரூ.2.5 கோடி மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த சோதனைகள் தொடர்பாக சிபிஐ இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில், மீட்கப்பட்ட தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.5 கோடியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT