இந்தியா

கேரளத்தில் அதிகரிக்கும் டெங்கு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

DIN

கேரளத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். 

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதன் மூலம் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், எலி காய்ச்சலுக்கு 27 பேரும் உயிரிழந்துள்ளனர். 

நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, காய்ச்சல் வழக்குகள் அதிகரிப்பு இல்லை, ஆனால் காய்ச்சல் காரணமாக எந்தவொரு இறப்புகளையும் தவிர்ப்பதே சுகாதாரத் துறையின் முயற்சிகள் என்றார். 

மேலும், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சிகிச்சை வழங்க மாவட்ட அளவிலான சுகாதார வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும், அந்தந்த மாவட்டங்களில் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 

கொசு இனப்பெருக்கத்தை சரிபார்க்க ஒவ்வொரு வாரமும் பொது இடங்கள், வீடுகள், அலுவலகங்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

பள்ளிக் கல்வித் திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக் கூடாது: காங்கிரஸ்

’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு : வானதி சீனிவாசன் பேச்சு

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT