இந்தியா

காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா வேண்டுகோள்!

DIN

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கும், சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கும் இன்று காலை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் எக்ஸ் பதிவில், 

நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, சத்தீஸ்கரில் காங்கிரஸ் போன்ற நம்பகத்தன்மையுள்ள கட்சி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், 4,000 போனஸ் உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களை சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளது. 

மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிவு : ரூ.7 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

பங்கு வர்த்தகம் சரிவு: ரூ.2 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

SCROLL FOR NEXT