காதல் விவகாரத்தில் தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!
உத்தரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாகாதல் விவகாரத்தில் தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!
உத்தரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷேக்புரா காதீம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. முஸ்கான் (17). இவர் அதே கிராமத்தில் உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார்.
முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். இதனை முஸ்கான் பொருட்படுத்தாமல், எஸ்எம்எஸ் அனுப்புவதைத் தொடர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆதித்யா மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
சம்பவம் நடைபெற்றபோது முஸ்கானின் தாய் பப்பிதா மற்றொரு அறையில் இருந்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த தாய் மற்றும் அண்டை வீட்டினர் முஸ்கானை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் முஸ்கான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.
சுட்டுக் கொன்று தலைமறைவான ஆதித்யாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.