முகப்பு
இந்தியா

கடந்தாண்டில் மழை, வெள்ளத்துக்கு 1,997 பேர் பலி!

மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரால் கடந்த ஓராண்டில் 1,997 பேர் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரால் கடந்த ஓராண்டில் 1,997 பேர் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு வானிலை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

அதில், 2022-2023 காலகட்டத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற வானிலை பேரிடரில் சிக்கி நாடு முழுவதும் 1,997 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,615 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், 18.54 லட்சம் ஹெக்டார் நிலப்பரப்பிலான பயிர்களும் மழை, வெள்ளம் போன்றவற்றால் சேதமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments