சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் கைது
மும்பையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது
மும்பையில் கடைக்கு சென்ற சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
நவி மும்பையின் திகா பகுதியில், எழுதுபொருள்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற 10, 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை, சஞ்சய் கெய்க்வாட் என்பவர் வழிமறித்து, சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, சஞ்சய் மீது பிஎன்எஸ், போக்ஸோ பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.