முகப்பு
இந்தியா

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் கைது

மும்பையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது

Updated On : 21 ஆகஸ்ட் 2024, 5:36 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பையில் கடைக்கு சென்ற சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

நவி மும்பையின் திகா பகுதியில், எழுதுபொருள்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற 10, 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை, சஞ்சய் கெய்க்வாட் என்பவர் வழிமறித்து, சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, சஞ்சய் மீது பிஎன்எஸ், போக்ஸோ பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.