பிரதமர் மோடி 
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் வாக்கெடுப்பு: பங்கேற்காத 20 பாஜக எம்பிக்களுக்கு நோட்டீஸ்?

ஒரே நாடு, ஒரே தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்காத 20 பாஜக எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பத்திட்டம்..

DIN

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல் செய்யும் வாக்கெடுப்பில் பங்கேற்காத 20-க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டது.

இதன்படி, ’ஒரே நாடு, ஒரே தோ்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இதையும் படிக்க..:வேலைவாய்ப்பின்மை 3.2% ஆகக் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று(டிச.17) தாக்கல் செய்தார்.

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த 2-வது மசோதாவும் வழிவகை செய்யும்.

இதையும் படிக்க..:மகாராஷ்டிர முதல்வருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.

இதனைத் தொடர்ந்து, மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 269 பேர் ஆதரவாகவும் 196 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதாக சட்டத்துறை அமைச்சர் அறிவித்தார்.

இதையும் படிக்க..:நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு!

மேலும், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பாஜகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்கெடுப்புக்கு முன்னதாக அனைத்து எம்பிக்களிடமும் கட்டாயம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவின் படி அனைத்து எம்பிக்களும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொள்ளாததால், இந்த மசோதாவுக்கான போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..:கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT