பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து. படம்: பிடிஐ
இந்தியா

உத்தரகண்ட்: பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 20 பேர் பலி!

200 அடி பள்ளத்தில் 40 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து.

DIN

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் திங்கள்கிழமை காலை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம், கார்வாலில் இருந்து குமாவோனுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டபோது, 40 பயணிகள் பேருந்தில் இருந்ததாகவும், இதுவரை 20 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் காவல்துறையும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்த செய்தி கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகாமையில் இருக்கக் கூடிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும், தேவைப்பட்டால் படுகாயமடைந்தவர்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற விவசாயிகளுக்கு தனித்துவ எண் அவசியம்

நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்

கூட்டுறவுத்துறை பணியாளா்களுக்கு போட்டிகள்

ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க்: பணிகளை காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தாா் முதல்வா்

திருச்செங்கோட்டில் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை: காணொலி வாயிலாக திறந்துவைத்தாா் முதல்வா்

SCROLL FOR NEXT