FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நன்கொடைகளால் கோடிகளில் புரளும் மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்!

மும்பை லால்பாக்சா ராஜ விநாயகருக்கு கிடைத்த நன்கொடைகள் பற்றி...

Updated On : 20 செப்டம்பர் 2024, 7:55 pm IST
மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்
பகிர்:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விதவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் பத்து நாள்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ரூ.5.65 கோடி, 70 கிலோ தங்கம்-வெள்ளிப் பொருள்கள் 10 நாள்களில் நன்கொடை குவிந்துள்ளது.

மும்பை முழுவதும் விநாயகர் கோயில்களிலும், பொது இடங்களிலும் மிகப்பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பத்து நாள்களும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

கர்நாடகம் முழுவதும் நந்தினி நெய்யை கட்டாயம் பயன்படுத்த உத்தரவு!

அந்த வகையில், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜ விநாயகர் உற்சவம் மிகவும் புகழ்பெற்றது. விழாத் தொடங்கிய முதல் நாளில் மட்டும் பக்தர்கள், ரூ.48 லட்சத்தை நன்கொடையாக அளித்திருந்தனர்.

Advertisement

Advertisement

இனி உங்கள் வீட்டிலும் பாக்கெட்டிலும்கூட குண்டு வெடிக்கலாம்! அதிபயங்கர போரின் அடுத்த உத்தி!

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில் 17ஆம் தேதி ஆனந்த சதுர்தசியன்று விழா நிறைவடைந்தது. மும்பையில் மட்டும் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறைவு விழாவில் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

நாள்தோறும் 3 லட்சம் லட்டு, ரூ.500 கோடி ஆண்டு வருவாய்! எரியும் நெய் பிரச்னை?

இந்த நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜ விநாயகருக்கு விழாவின் பத்து நாள்களும் நன்கொடைகள் குவிந்தன.

இதுவரையிலும், ரொக்கமாக சுமார் ரூ. 5.65 கோடியும், 4.15 கிலோ தங்கப் பொருள்களும், 64.32 கிலோ வெள்ளிப்பொருள்களும் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் 20 கிலோ தங்கத்திலான கிரீடம் ஒன்றையும் லால்பாக்சா விநாயகருக்கு நன்கொடையாக அளித்திருந்தார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்? - தமிழக அரசு விளக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments