ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை மீட்டு திருமணம் செய்த பிகார் இளைஞர்!
பிகார் இளைஞரின் மனிதநேய செயல் பற்றி..
பிகாரில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் தனது ரயில் பயணத்தின்போது பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரைச் சந்தித்துள்ளார். அந்த பெண்ணிடம் பயணிகள் சிலர் தவறாகப் பேசியும், ஒருசிலர் தவறாகவும் நடக்க முயன்றுள்ளனர். இதனால் அந்தப் பெண் பெரும் சங்கடமாக உணர்ந்துள்ளார்.
அனாதைப் பெண்ணை பாதுகாக்க கோலு, தன்னுடன் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணின் நிலையை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அந்தப் பெண்ணின் பின்னணி மற்றும் அவர் எதிர்கொண்ட சிரமங்களைப் பற்றி அறிந்த கோலு குடும்பத்தினர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
சில நாள்கள் அந்தப் பெண் கோலுவின் வீட்டில் தங்கிவந்துள்ளார். நாள்கள் சென்ற நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அந்தப் பெண்ணை கோலு திருமணம் செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
A young man from Bihar’s Buxar rescued an orphan girl he met during a train journey and later married her with his family’s support
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.