FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜன.6-ல் கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு?

கர்நாடகத்தின் முதல்வர் பதவி விவகாரம் குறித்து ஆளுங்கட்சி எம்எல்ஏவின் கருத்து...

Updated On : 13 டிசம்பர் 2025, 4:13 pm IST
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - (கோப்புப் படம்)
பகிர்:

கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனும் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தின் ராமநகரா சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன், வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்க 99 சதவிகிதம் வாய்ப்புள்ளது. எல்லாரும் இதைதான் கூறுகின்றனர். வரும் ஜன.6 அல்லது ஜன.9 இவ்விரண்டில் ஏதோவொரு தேதியில் இது நடைபெறும்” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக, முதல்வர் பதவியில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனவும், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் எனவும், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி! பிரதமர் மோடி நன்றி!

summary

Congress MLA H.A. Iqbal Hussain has stated that D.K. Shivakumar will be sworn in as the Chief Minister of Karnataka on January 6th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments