FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் பயிற்சி மைய ராணுவ அணிவகுப்பு: 133 புதிய அதிகாரிகள் நியமனம்

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

8 மார்ச் 2025, 9:33 am IST
- X | Army Training Command
பகிர்:

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த இராணுவ அணிவகுப்பு குறுகிய சேவை ஆணையம் மற்றும் அதற்கு சமமான அதிகாரிகளின் தேர்ச்சி விழா நடைபெற்றது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர்.

இந்திய ராணுவத்தின் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவைகளில் மொத்தம் 133 அதிகாரி பயிற்சி மாணவர்கள் மற்றும் 24 பெண் அதிகாரி பயிற்சி மாணவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, வெளிநாட்டைச் சேர்ந்த 5 வெளிநாடு அதிகாரி பயிற்சி மாணவர்களும், 7 பெண் வெளிநாட்டு அதிகாரி பயிற்சி மாணவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

பயிற்சி சிறப்பாகப் பணியாற்றிய மாணவர்களுக்கு வாள், தங்கப் பதக்கங்கள், விருதுகளும் வழங்கப்பட்டன. தில்லியின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ முன்னிலையில், தேர்ச்சி பெற்று வெளியேறும் மாணவர்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

அணிவகுப்பைத் தொடர்ந்து, உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. உறுதிமொழியில், இந்திய அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தேசத்தைப் பாதுகாப்பதாகவும் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments