கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரில், 51 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (அக். 29) சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின், பிஜப்பூர் மாவட்டத்தில் கூட்டாக ரூ.66 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 9 பெண்கள் மற்றும் 42 ஆண்கள் என மொத்த 51 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்தக் குழுவில், தலா ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் போதம் (எ) ரஞ்சித், மன்கி கொவாசி, ஹுங்கி சோதி மற்றும் ரவிந்திரா புனெம் உள்ளிட்ட மாவோயிஸ்ட் மூத்த தளபதிகளும் சரணடைந்துள்ளனர்.

இதுபற்றி, காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்காக அரசு அறிவித்துள்ள திட்டங்களினால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிஜப்பூரில் 2025 ஆம் ஆண்டு மட்டும் 461 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 138 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேஒய்சி மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

In Chhattisgarh, 51 Maoists, including 9 women, surrendered to security forces today (Oct. 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

ம.பி.யில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? சுற்றுலாத் துறை செயலர்!

அதெல்லாம் பழைய செய்தி! EPS பேச்சுக்கு OPS பதில்!

இடைக்கால பட்ஜெட்: பிப். 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

SCROLL FOR NEXT