சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீமண்ணா காந்த்ரே காலமானார்...
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே (வயது 102) வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மூச்சுத் திணறல் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த பீமண்ணா காந்த்ரே, வெள்ளிக்கிழமை (ஜன. 16) இரவு காலமானார் என அவரது மகனும் கர்நாடக வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மூத்த தலைவர் பீமண்ணா காந்த்ரேவின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான அமைச்சரவையில் பீமண்ணா காந்த்ரே போக்குவரத்து துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
மேலும், கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் 4 முறை கர்நாடக சட்டப்பேரவையின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Indian freedom fighter and senior Congress party leader Bheemanna Kantre passed away at the age of 102.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.