அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மரணம் தொடர்பாக மத்திய விமான அமைச்சகம் விசாரணை
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம்செய்த சிறிய ரக விமானம், புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகி, அவருடன் சேர்த்து 5 பலியாகினர். இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து மற்றும் சம்பவ விதிகளின்படி, விசாரணை வெளிப்படையாகவும் காலக்கெடுவுக்குள்ளும் நடத்தப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், அதன் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில அரசின் ஒத்துழைப்பும், உள்ளூர் நிர்வாகத்தின் உதவியும் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Ajit Pawar Plane crash: Civil Aviation Minister Ram Mohan Naidu assuring a transparent, time-bound investigation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.