முகப்பு
இந்தியா

ராமேஸ்வரம்: அஜீத் பவார் அஸ்தி அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது!

மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:20 AM
அஜீத் பவார் அஸ்தி கரைப்பு - விடியோ க்ளிப்
பகிர்:

மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் விமான விபத்தில் பலியான மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி, இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் கரைக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ஜன. 28 ஆம் தேதியில் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர்.

அஜீத் பவார் விமான விபத்தில் பலியான மறுநாளே, அவரது இறுதிச் சடங்குகள் பாராமதியில் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

அதுமட்டுமின்றி, மாநில துணை முதல்வராக அவரது மனைவியான சுநேத்ரா பவார் பதவியும் ஏற்றுக் கொண்டார்.

summary

Former Maharashtra Deputy CM Ajit Pawar's ashes were immersed in the sea of ​​Agni Theertha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.