மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு
மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்க்கொள்ளுவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM
ராமேசுவரத்திலிருந்து கடந்த 13 ஆம் தேதி மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இரண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்க்கொள்ளுவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் விபத்து மீட்புக்காக 108 ஆம்புலன்ஸ் இருப்பது போல கடலில் படகு விபத்துக்குள்ளாகும் போதும் மீனவர்களை மீட்க விபத்து மீட்பு அதிவேக 108 ஆம்புலன்ஸ் படகு சேவையை மத்திய, மாநில அரசுகள் உறுவாக்க வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவ சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.