முக்கியச் செய்திகள்

தாயின் வயிற்றிலிருக்கும் 26 வாரக் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

RKV

தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு தீராத இதய நோய் அறிகுறிகள் இருப்பதால், கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. நீதிமன்ற அனுமதிக்கு முன் 26 வாரக் கருவைக் கலைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. இந்திய மருத்துவ வரலாற்றில் தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு இந்த உலகில் பிறந்து வாழ பூரண உரிமை உண்டு. எனவே இம்மாதிரியான வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் கருவுக்கு ஆதரவளிப்பதாகவே இயற்றப்பட்டுள்ளன. அதனால் தான் இன்று அளிக்கப் பட்டுள்ள இந்த தீர்ப்பு கவனத்திற்குரியதாகக் கருதப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கருக்கலைப்பு சட்டப்படி தவறு. ஆனால் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் 6 மாத வளர்ச்சிக்கும் அதிகமான இந்தக் கருவுக்கு பிறவி இதய நோய் காரணங்கள் அதிகமிருப்பதால் இந்தக் கரு பிறந்த பின்னும் உயிர் வாழ்தல் கடினம் என்பதால் மட்டுமே இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT