ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு - லைவ் அப்டேட்ஸ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இதற்காக ஓராண்டுக்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை கடந்த வியாழக்கிழமை(மாா்ச் 5) சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதன் தொடர்ச்சியாக, மீண்டும் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் இன்று (மாா்ச் 12) ஆலோசனை நடத்தினார். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார், அரசியல் கள நிலவரம், கட்சி தொடங்குவது குறித்து இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Advertisement
ரஜினி கூறும் மூன்று திட்டங்கள் என்னென்ன?
தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி: நடிகர் ரஜினி திட்டவட்டம்
கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்றுவிட்ட நடிகர் ரஜினிகாந்த்
தமிழக மக்கள் எதற்காக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்? ரஜினி சொன்ன ரகசியம்
அரசியல் மாற்றம்: கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை- நடிகர் ரஜினிகாந்த்
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..
நான் வருங்கால முதல்வர் என்று கூறுவதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும். நான் ஆட்சித் தலைமை பொறுப்பு ஏற்பதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது
இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை...
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்...
கட்சி வேறு, ஆட்சி வேறு என்று தெரிய வேண்டும்...
வாக்குகளை பிரிக்க நான் வரவில்லை. மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர தயாராக வேண்டும்
இந்தியா முழுவதும் இது பரவ வேண்டும்...
அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன்...
எழுச்சி தெரிய வேண்டும்...
சிஎம்,சிஎம் என்று சொல்லாமல் இந்த எழுச்சியைச் சொல்லுங்கள்...
நான், 40, 44 ஆ... இப்போது 71, பிழைத்து வந்திருக்கிறேன்...
இன்னும் ஒரே ஒரு வாய்ப்புதான்....
இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி அலை உருவாக வேண்டும். ஒரு புரட்சி உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகும்பட்சத்தில் மற்ற கட்சிகளின் அசுர பலம் காணாமல் போகும்.
நான் ஒரு துரும்புதான்...
இந்தப் புரட்சி வெடிக்க வேண்டும்...
இதை பத்திரிகையாளர்கள் சொல்ல வேண்டும்...
அந்த அதிசயம் அற்புதம் இங்கே நடைபெற வேண்டும்....
விவேகாநந்தர் இங்கேதான் மாறினார்...
அரசியலில் கலைஞரின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
காந்தி இங்கேதான் உடைகளை மாற்றினார்...
இது புரட்சிக்கான மண்...
அதையே நான் விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன்...
அந்த எழுச்சி ஏற்பட்டால் எந்த பலமும் எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியாது...
திமுகவில் கலைஞர், அதிமுகவில் ஜெயலலிதா இருந்ததற்காகவே அந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்தனர்
இந்த நல்ல சந்தர்ப்பம், எழுச்சி உருவாக வேண்டும்...
அசுர பலத்துடன் உள்ள திமுக, அதிமுகவை நாம் எதிர்த்து நிற்கிறோம். திமுகவில் கலைஞர், அதிமுகவில் ஜெயலலிதா என இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்தனர்.
இருந்த இரு ஆளுமைகளும் இப்போது இல்லை...
கோழை என்பார்கள், கேலி செய்வார்கள் அல்லவா..
தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆளுமை தேவை. நல்ல ஆளுமை கொண்ட ஒரு தலைவரை கொண்டுவந்து மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும்
வருவேன் என்று சொல்லிவிட்டு ஒதுங்கினால் என்னென்ன சொல்வார்கள்...
எவ்வாறு செய்ய முடியும்...
இவர்களைச் சமாளிக்க முடியுமா, எதிர்கொள்ள முடியுமா
கட்சியின் கொள்கைகள் குறித்து நான் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
இன்னொரு புறம் ஆட்சி அதிகாரம், கட்டமைப்பு...
ஒரு பக்கம் பெரிய லெகஸி...
நாம் எதிர்ப்பது அசுர பலத்துடன் இருக்கும் இரு ஜாம்பவான்கள்...
உண்மைத் தன்மைக்கு எப்போதுமே மதிப்பு உள்ளது. எனவே, கட்சியின் கொள்கைகள் குறித்து மக்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கிறேன்
உண்மைக்கு, செல்ப்லெஸ்நெஸ்-க்கு ஒரு பவர் இருக்கிறது...
கட்சியின் கொள்கைகள் குறித்து இப்போதே ஏன் ரஜினி சொல்கிறார் என்று நினைக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மை மிக அவசியம்.
கட்சிக்கு ஆரம்பிக்கும்போது சொல்லாமல் இப்போது ஏன் சொல்கிறார்...
வெளிநாடுகளில் எப்படியெல்லாம் இருக்கின்றன...
அறிஞர் அண்ணா நான் மதிக்கும் ஒரு நல்ல தலைவர். அவரைப் போன்ற ஒரு தலைவரை உருவாக்க வேண்டும்
படித்தவர்களைக் கொண்டு வர வேண்டும்
எனக்கு ஒரு மாற்று அரசியல் தேவை; அரசியல் மாற்றம் வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும்.
நல்ல தலைவர்கள் வேண்டும்
நல்ல மாற்றம் கொண்டுவர வேண்டும்
எப்போதும் வெளிப்படையாகப் பேசுகிறேன்
கட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் போன்ற படித்தவர்களை நியமிப்பேன்
முதல்வர் பதவி வேண்டாம் என்று நான் சொல்வது தியாகமல்ல
முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று என்னிடம் அனைவரும் கூறினர். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை
நான் சிஎம் கேன்டிடேட் இல்லை என்பதை யாரும் ஏற்கவில்லை
கட்சித் தலைமையில் உள்ளவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை ஆட்சித் தலைமை செயல்படுத்துவது கடமை
மற்றவர்களை அமர வைத்துப் பார்ப்பது மக்களுக்குப் பிடிக்காது என்றார்கள்.
அழகு பார்ப்பது என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை
இளைஞனாக, படித்தவராக, தொலைநோக்கு பார்வை உள்ளவர்களை அரசியலில் கொண்டுவர வேண்டும்
முதல்வர் இல்லை என்றால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றார்கள்
50 வயதுக்குக் கீழே என்றால் நம்மிடம் அதைவிடக் கூடுதலானவர்கள் இருக்கிறார்களே.
பதவிக்காக வருவோர் வேண்டவே வேண்டாம்
எனக்குத் தெரிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் சொன்னேன்
கட்சியில் யார் எந்த தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவோம்; அதை சரி செய்யவில்லை எனில் அவர்களை தூக்கி எறிவோம்
என் மனதுக்குள்ளேயே வைத்திருந்தேன்
சுவருக்கெல்லாம் காதுகள் இருக்கின்றன
மாற்று அரசியலைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று நம்புகிறேன்
சரியாகச் செயல்படாவிட்டால் தூக்கி எறிவோம்
கட்சித் தலைவர் என்பவர் கண்காணிக்க வேண்டும்
தன்மானம் உள்ளவர்களை உட்கார வைப்போம்
சோ உள்பட தலைவர்கள் பலரும் எல்லாரும் என்னை அழைத்தார்கள்.
தேவையான அளவு மட்டுமே கட்சி நிர்வாகிகள்
இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க முடிவு
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது எனது முடிவு
முதல்வர் பதவியை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது
வல்லுநர்கள் குழு அமைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்த வேண்டும்
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை
ஆட்சியில் இருப்பவர்களைக் கட்சியில் இருப்போர் கேள்வி கேட்க முடியாது.
எல்லா கட்சிகளிலும் ஆட்சிக்கும் தலைவர், கட்சிக்கும் தலைவர் என்ற நிலை
அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். தேர்தலில் போட்டியிட 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கே முன்னுரிமை
புது சக்தி சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்
சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு
2017-ம் ஆண்டிற்கு முன்பு நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதில்லை. எனவே, 26 ஆண்டுகளாகரஜின அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்று கூறுவது தவறு. 2017 டிசம்பர் 1ம் தேதி தான் நான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன்.
கடந்த செய்தியாளர் சந்திப்பில் எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறினேன். பல விஷயங்கள் அதுகுறித்து செய்தியாக வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு.
மாவட்டச் செயலர்கள் நாங்கள் ஆலோசித்தது குறித்து வெளியே கூறவில்லை. அதற்கு என் மனமார்ந்த நன்றி.
ரஜினி செய்தியாளர் சந்திப்பு லைவ்
ரஜினி செய்தியாளர் சந்திப்பு ரஜினியின் அதிகாரப்பூர்வ யூ ட்யூப் பக்கத்தில் விடியோ லைவ் செய்யப்படுகிறது. www.youtube.com/channel/UC-pxpcgc1VOfLATY5tf2xQg/live
வீட்டில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த்
காலை 10 மணியளவில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த் அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் லீலா பேலஸூக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
1960-70களில் நடந்த புரட்சி மீண்டும் தமிழகத்தில் நடக்க வேண்டும்: ரஜினி ஆவேசம்!
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி கொள்கைகள் குறித்துப் பேசினார். அப்போது, 1960-70களில் நடந்த புரட்சியைப் போன்று மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று கூறினார். மேலும் விரிவான செய்திக்கு..
ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை: ரஜினிகாந்த்
நாம், சினிமா புகழ், ரசிகர்களை வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியுமா? அரசியலுக்கு வருவது என்ன சாதாரண விஷயமா? என்னைநம்பி வருவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. இந்த வயதில் இதெல்லாம் எனக்கெல்லாம் தேவையில்லை என்று ரஜினி கூறினார். மேலும் விரிவான செய்திக்கு..