தில்லியில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற காற்றின் தரம்! PTI
புதுதில்லி

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற காற்றின் தரம்!

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடிக்கிறது.

தில்லியில் பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக வா்த்தகா்கள் பெரும் இழப்பை சந்தித்த நிலையில், இந்த ஆண்டு பசுமை பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, தீபாவளிக்கு முன்னதாக பசுமை பட்டாசுகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி படுஜோராக நடைபெற்றது.

இதனிடையே, தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தின் (கிராப்) 2-ஆம் நிலை அமலுக்கு வந்த போதிலும், தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடிக்கிறது.

தீபாவளி நாளான இன்று(அக். 20) பிற்பகல் நிலவரப்படி, தலைநகரில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 31 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாகவும், 3 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400க்கும் மேல் பதிவாகி ‘தீவிரப்’ பிரிவில் இருந்ததாகவும் வானிலை கண்காணிப்பு நிலையத் தரவுகள் தெரிவிக்கின்றன

Delhi's air quality nose dived on Monday, the Diwali afternoon, as pollution levels at 31 out of 38 monitoring stations redlined at 'very poor', and 'severe' at three stations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கந்தா்வகோட்டையில் இளைஞா் விளையாட்டுப் போட்டிகள்

‘இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டுப் போட்டி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா்

ஆயுதச் சட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

புழுதிக்குளம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஐபிஎஸ் உயரதிகாரி சாயா சா்மாவுக்கு குடியரசுத் தலைவா் பதக்கம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT